(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படுபவர் பரம்பரை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினராக இருக்கவேண்டும்.
அவ்வாறு இல்லாமல் அண்மையில் கட்சியில் இணைந்தவர்களை வேட்பாளராக நியமித்தால் அரசியலிலிருந்து விலகிக்கொள்வோம் என ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை உறுப்பினர்களான ஹேஷான் விதானகே மற்றும் சமிந்த விஜேசிறி ஆகியோர் கூட் டாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனை குறிப்பிட்டனர்.
அவர்கள் இருவரும் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி அமைத்துக்கொண்டு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முகம்கொடுக்க நடவடிக்கை எடுத்துவருகின்றது. கூட்டணி அமைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியைச்சேர்ந்த ஒருவரே வேட்பாளராக நியமிக்கப்படவேண்டும். இதுதொடர்பாக நாங்கள் கட்சியின் மேலிடத்துக்கு அறிவித்திருக்கின்றோம்.
தேர்தல் காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து சிறிய கட்சிகள் இதற்கு முன்னரும் போட்டியிட்டிருக்கின்றன. தற்போது அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு முன்னணி ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. முன்னணி அமைப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் முன்னணியின் யாப்பு அமைக்கும் போது அதில் பிரதான பதவிகள் ஐக்கிய தேசிய கட்சிக்கே இருக்கவேண்டும்.
அத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக பொது வேட்பாளர் ஒருவரை இம்முறை நியமிக்க ஆதரவளிக்கமாட்டோம். தகுதியான வேட்பாளர்கள் கட்சிக்குள் இருக்கின்றனர். இதற்கு முன்னர் பொது வேட்பாளர்களை நியமித்ததால் கட்சிக்கு பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. அதனால் மீண்டும் அந்த நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது. அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியில் அண்மையில் இணைந்துகொண்டவர்கள் நினைத்தவாறு கட்சியை வழிநடத்த இடமளிக்க முடியாது. ஏனெனில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் எப்போதும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக வருவதே விரும்புகின்றனர்.
ஆதரவாளர்களை மீறி கட்சி தீர்மானிக்க முடியாது. அவ்வாறு ஐக்கிய தேசிய கட்சி அல்லாத வேறு ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டால் நாம் எமது அரசியலில் இருந்து விலகிக்கொள்வோம் என்றனர்.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்கவேண்டும் என தெரிவித்து 10 இலட்சம் கையொப்பங்களை சேகரிக்க ஆதரவாளர்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். அதன் ஆரம்ப நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை கடவத்தையில் ஆரம்பிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM