பொது­ஜன பெர­முன, சு.க.விலி­ருந்து பலர் ஐ.தே.க.வுடன் இணையும் சாத்தியம்..!

Published By: J.G.Stephan

05 Aug, 2019 | 11:28 AM
image

(ஆர்.யசி)

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ஒரு குழுவும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் ஒரு தரப்­பி­னரும் ஐக்­கிய தேசிய கட்­சியின் கூட்­ட­ணியில் இணைய  விருப்பம் தெரி­வித்­துள்ள நிலையில்  அவர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை விரி­வு­ப­டுத்தும் பிர­தான நோக்­கத்தின் கார­ண­மா­கவே இன்­றைய தினம் இடம்­பெ­ற­வி­ருந்த ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­யி­லான ஜன­நா­யக தேசிய முன்­ன­ணிக்­கான ஒப்­பந்த நிகழ்­வு­களை ஒத்­தி­வைத்­த­தாக அமைச்சர் பி.ஹரிசன் தெரி­வித்தார். 

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மையில் பிர­தான பங்­காளிக் கட்­சி­களை இணைத்து ஜன­நா­யக தேசிய முன்­ன­ணிக்­கான ஒப்­பந்­தத்தை  செய்ய ஐக்­கிய தேசிய கட்சி தீர்­மானம் எடுத்­த­போ­திலும் இறுதி நேரத்தில் அது ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் இது குறித்து வின­விய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

 அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஜன­நா­யக தேசிய முன்­ன­ணிக்­கான ஒப்­பந்த நிகழ்வு இன்று இடம்­பெ­ற­வி­ருந்த போதிலும் அது ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அதனை  எமக்கு அறி­வித்­துள்­ளனர். குறிப்­பாக ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் கட்­சிகள் மற்றும் புதிய கட்­சி­களை இணைத்து கூட்­ட­ணியை அமைக்க தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும்  ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணிக் கட்­சியின் சிலர் உறுப்­பி­னர்கள் எம்­முடன் இணைந்து கூட்­ட­ணியில் பங்­கு­கொள்ள இணக்கம்  தெரி­வித்துள்­ளனர். ஆகவே பேச்­சு­வார்த்­தை­களை விரி­வு­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. 

 பாரிய கூட்­ட­ணியை அமைக்கும் வேளையில் அதன் செய­லாளர் ஐக்­கிய தேசிய கட்சி போன்று பிர­தான கட்­சியின் உறுப்­பி­ன­ராக இருக்க வேண்டும் என்ற நியா­ய­மான கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. எமது நிலைப்­பாடும் அது­வா­கவே இருக்­கின்­றது. பொதுச்­செ­ய­லாளர் மிகவும் பொறுப்­பான ஒரு­வ­ராக இருக்க வேண்டும்.

எனவே எமது கட்­சியின் ஒரு­வரை நிய­மிக்க வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். இதனை நாம் கட்­சியின் தலை­மை­யிடம் கூறினோம். அத்­துடன் ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து இப்­போது முந்­திக்­கொள்ள வேண்­டிய அவ­சியம் இல்லை என்றே நினைக்­கின்றேன். எமது தாப்பில் தகு­தி­யான பல­மான வேட்­பா­ளர்கள் உள்­ளனர்.

ஆகவே அவர்­களில் ஒரு­வரை கள­மி­றக்கி தேர்­தலில்  வெற்­றி­பெற முடியும். மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்­தி­யாக வேண்டும் என்ற முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டும் எல்லை நிர்ணயத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ள காரணத்தினாலும் அடுத்ததாக நடத்தப்பட வேண்டிய தேர்தல் நெருங்கியுள்ள காரணத்தினாலும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே சிறந்ததாக அமையும். ஆகவே வரும் நாட்களில் எமது வேட்பாளர் பெயர் வெளிவரும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13