(ஆர்.யசி )
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சிகள் இன்று பொதுக்கூட்டணியை அமைப்பதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் பொதுக் கூட்டணி அமைக்கும் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் யாப்பினை திருத்தும் வரையில் பொதுக்கூட்டணியை அமைக்கும் தீர்மானங்களை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் உறுதிப்படுத்தினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சிகள் மற்றும் புதிய கட்சிகள் இணைந்து பொதுக் கூட்டணியை இன்றைய தினம் அமைக்க தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் கூட கடந்த சில தினங்களாக கட்சிக்குள் நிலவும் மாற்றுக் கருத்துக்கள் காரணமாக உறுதியான தீர்மானங்களை எடுக்க முடியாதிருந்தது.
இந்நிலையிலேயே நேற்று முன்தினம் இரவு ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் கூடியது.
இதன்போதே இவ்வாறு ஒரு சில தினங்களுக்கு கூட்டணியை அமைக்கும் செயற்பாட்டை ஒத்திவைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,
இது குறித்து அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடம் வினவியபோது அவர் குறிப்பிடுகையில்,
நாம் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து கலந்துரையாடினோம். சகலரும் இணங்கும் வகையிலேயே தீர்மானங்களை எடுக்க வேண்டும். கட்சிக்குள் முரண்பாடுகளை வைதுக்கொண்டு கூட்டணிகளை அமைக்க முடியாது.
ஆகவேதான் முதலில் ஐக்கிய தேசிய முன்னணியின் யாப்பில் உரிய திருத்தங்களை முன்னெடுத்து பொது இணக்கப்பாடு ஒன்றினை எட்டிய பின்னர் பொதுக்கூட்டணியை அமைக்க முடியும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதற்கான இணைக்கத்தை தெரிவித்துள்ளார். ஆகவே இந்த ஒரு சில தினங்களில் கூட்டணிக்கான யாப்பு திருத்தங்களால் முன்னெடுக்கப்பட்ட பின்னர் விரைவில் பொதுக் கூட்டனியை அமைப்போம் . ஐக்கிய தேசிய முன்னணியின் சகல கட்சிகளினதும் இணக்கத்துடன் புதிய யாப்பினை உருவாக்கிய பின்னர் கூட்டணியை அமைக்க சகல தரப்பும் இணைக்கம் தெரிவித்துள்ளன . நாளை (இன்று ) முன்னெடுக்கவிருந்த பொதுக் கூட்டணிக்கான கைச்சாத்து நிகழ்வையும் ஒத்திவைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM