பொதுப்பரீட்சைகளுக்கு தோற்றும் முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளின் உடை தொடர்பான கலந்துரையாடலொன்றை இலங்கை முஸ்லிம் கவுன்சில் ஒழுங்கு செய்திருந்தது.
கொழும்பு, இஸ்லாமிய கற்கைகள் மத்திய நிலையத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பு, அல்முஸ்லிமாத் முஸ்லிம் வாலிபர் சங்கம், அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு மற்றும் சிவில் சமூக அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள், கொழும்பிலுள்ள பிரபல முஸ்லிம் மகளிர் பாடசாலைகளின் அதிபர்கள், தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில், பரீட்சைகள் திணைக்கள முன்னாள் பிரதி ஆணையாளர் எம்.எம்.முஹம்மத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளின் உடை காரணமாக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் போது எழுந்த பல்வேறு சர்ச்சைகள் பற்றியும் சில முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் பரீட்சை விதிகளை மீறி நடந்து கொண்டமை பற்றியும் வெளியே இருந்து தகவல்கள் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டுகள் பற்றியும் இதன்போது ஆழமாக கலந்துரையாடப்பட்டது.
ஷரீஆ அனுமதித்த வரம்புகளுக்குள் அரசின் சட்டங்கள், பரீட்சை விதிமுறைகள் என்பவற்றை அனுசரித்து முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளின் உடை தொடர்பாக பின்வரும் அம்சங்களில் இதன்போது உடன்பாடு ஏற்பட்டது.
அதாவது பாதுகாப்பு நோக்கம், பரீட்சை விதிகளுக்கு அமைய முகத்தையும் மணிக்கட்டுக்கு வெளியே உள்ள பகுதியும் தெரியக்கூடிய உடையணிதல்
ஹிஜாப் என்பது தனியே கறுப்பு நிற அபாயாக்கள் அணிவதை மட்டும் வலியுறுத்தவில்லை. பல்வேறு நிறங்களில் பல்வேறு வடிவமைப்புடைய உடைகளை அணிந்து வருவது வரவேற்கத்தக்கது. இதனால் பரீட்சை மேற்பார்வையாளர்களது மனப்பான்மையில் இது நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
பாடசாலை பரீட்சார்த்திகள் பாடசாலை சீருடை அணியலாம். இங்கு முக்கியமான ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். சில பாடசாலைகளின் சீருடையில் ஒரு பெரிய புடவைத் தொப்பி பின்னால் முதுகுவரை தொங்கவிடப்படுகிறது. இதனை அணிவதால் பரீட்சை விதிகளை மீறுவது இலகு. ஆகவே மேற்பார்வையாளர் இவர்களை கடுமையாக பரிசோதிக்க வேண்டிவரும். இதனால் சில பரீட்சை மண்டபங்களில் அசம்பாவிதங்களும் நடந்துள்ளன. ஆகவே காதை மூடி ‘ஸ்கார்ப்’ அணிவது நல்லது.
முஸ்லிம் பெண்கள் காதை மூடுவது கட்டாயம் என பலர் எடுத்துக்கூறினர். காது ஐம்புலன்களில் ஒன்று. அதில் சில நுண் கருவிகளை பொருத்தி வெளியிலிருந்து தகவல்களை பெறமுடியும் என கண்டறியப்பட்டுள்ளது. சில இடங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டார். ஆகவே பெண் பரீட்சார்த்திகள் காதை மூடி ‘ஸ்கார்ப்’ (Scarf) அணிந்து வந்து பரீட்சை மண்டபத்தில் மட்டும் காதைத் திறந்து விடுவது சந்தேகங்களை நீக்கும் என எதிர்பார்க்கலாம்.
அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பரீட்சார்த்திகள் மேற்குறிப்பிட்ட அம்சங்களில் கரிசனை காட்டுமாறு அன்புடன் வேண்டுகிறோம். இவ்வாறாக நாம் நெகிழ்ச்சியுடன் செயல்படுவது நமது பெண் பிள்ளைகள் மனத்தாக்கங்கள் எதுவுமின்றி, மகிழ்ச்சியாக பரீட்சை எழுதுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் என அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு எதிர்பார்க்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM