தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி செல்பவர்களுக்கு, இனிப்பு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய பொலிஸாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில், போக்குவரத்து பொலிஸார் நேற்று (3ஆம் திகதி) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி சென்றவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து அவர்களுக்கு லட்டு வழங்கினர். வாகன ஓட்டிகளும் என்ன ஏதுவென தெரியாமல் திருதிருவென விழித்தபடி ஒருவித திகைப்புடன் அந்த லட்டை பெற்றுக்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து அவர்களிடம் பேசிய பொலிஸார்,"இதுதான் முதலும் கடைசியாக இருக்கட்டும்; இனிமேல், தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்" என, 'அன்புடன்' எச்சரிக்கை விடுத்தனர்.
தங்கள் தவறை உணர்ந்த வாகன ஓட்டிகள், "இனிமேல் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்ட மாட்டோம்" என பொலிஸாரிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டு, அங்கிருந்து சென்றனர்.
பொலிஸாரின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு நடவடிக்கையை, பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM