(இராஜதுரை ஹஷான்)
கட்சி உறுப்பினர்களை கொண்டு கூட்டணியமைத்துக் கொள்ள முடியாத ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஆட்சியினை கைப்பற்றுவதாக குறிப்பிட்டுக் கொள்வது வேடிக்கையாகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று அறிவித்தவுடன் கட்சி மூன்றாக பிளவுப்படும். ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத தலைமைத்துவத்தினால் ஒருபோதும் தற்போது நாடு எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாது.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித முரண்பாடுகளும் எதிரணிக்குள் கிடையாது. தலைமைத்துவத்தின் கருத்திற்கு அனைத்து தரப்பினரும் இதுவரையில் இணக்கம் தெரிவித்து தீர்மானங்களை ஏற்றுக் கொண்டுள்ளோம்.
எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று உத்தியோகப்பூர்வமாக இம்மாதம் 11 ஆம் திகதி அறிவிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அன்றைய தினம் பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக ஏற்று ஜனாதிபதி வேட்பாளரையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM