யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் வீட்டிலிருந்த கயிற்றில் தொங்கி விளையாடிய சிறுவன் அதில் சிக்கிக் கொண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் சிவபாலன் அச்சயன் (வயது-11) என்ற மாணவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 24ஆம் திகதி வீட்டில் கட்டப்பட்டிருந்த கயிற்றைப் பிடித்து சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது அவனது தாயார் விளையாட வேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டு. மதிய உணவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
சிறிது நேரத்தில் சிறுவனை அழைத்தபோது அவனது சத்தத்தைக் காணவில்லை என்று விளையாடிய இடத்தில் தேடிய போது சிறுவனது கழுத்தில் கயிறு இறுகியிருப்பதை கண்ட. தாய் உடனடியாக உறவினர்களின் உதவியுடன் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து குறித்த சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று குறித்த சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளான்.
இந்நிலையில் குறித்த சிறுவனின் இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகார நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM