ஏ9 வீதியில் வாகன விபத்து : இருவர் படுகாயம்

Published By: Digital Desk 4

02 Aug, 2019 | 08:15 PM
image

வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் மோட்டர் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

வவுனியாவிலிருந்து ஏ9 வீதி வழியாக யாழ் நோக்கி பயணித்த மோட்டர் சைக்கிள் ஓமந்தை, கள்ளிக்குளம் சந்திக்கு அண்மையில் வீதியைக் கடக்க முற்பட்ட துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 14 வயதான நொச்சிமோட்டையைச் சேர்ந்த உருத்திரகுமார் திவாகர் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதியான சுப்பிரமணியம் வெங்கடசரணியன் (வயது 35) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இவ்விபத்து குறித்து ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31