எத்தனை முறை நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்தாலும் முகங்கொடுக்கத் தயார் - ரிஷாத் 

Published By: Vishnu

02 Aug, 2019 | 08:00 PM
image

(எம்.மனோசித்ரா)

தனக்கு எதிராக எத்தனை முறை நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டாலும் அதற்கு முகங்கொடுப்பதற்கு தயாராகவுள்ளதாக கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். 

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர வேண்டுமானால் ஏதாவது குற்றம் செய்திருக்க வேண்டும். அவ்வாறு நான் எந்த குற்றமும் செய்யவில்லை. இதனை பொலிஸாரும் தெரிவித்துள்ளனர். அவ்வாறில்லையென்றால் எனக்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளிக்குமாறும் கூறப்பட்டது. 

அதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டது. வழங்க்கப்படும் முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இப்போது மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை பற்றி பேசும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அப்போது எதையுமே செய்யவில்லை. 

வாய்ப்பு வழங்கப்பட்ட போது அமைதியாக இருந்துவிட்டு தற்போது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப் போவதாக அவர்கள் கூறுகின்றமை அரசியல் பழிவாங்கலாகும் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:30:27
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13