“விமான சேவைக்கட்டண குறைப்பால் மாத்திற்கு 175 மில்லியன் நஷ்டம் ஏற்படும்“

Published By: Daya

02 Aug, 2019 | 05:05 PM
image

(எம்.மனோசித்ரா)

 

இலங்கை விமானசேவையில் சர்வதேச விமானங்களை தரித்து வைத்திருப்பதற்கான கட்டணத்தில் நூற்றுக்கு 25 வீத குறைப்பை மேற்கொள்ள அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தால் மாதத்திற்கு 175 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படும் என்று இலங்கை விமான சேவையின் சுதந்திர சேவையாளர் சங்கம் எச்சரித்துள்ளது. 

இலங்கை விமான சேவையின் சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் ஜனக விஜயபத்திரத்ன இது தொடர்பில் தெரிவிக்கையில், 

உள்நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு தரித்து வைத்திருப்பதற்கான கட்டணத்தில் நூற்றுக்கு 25 வீத குறைப்பை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இலங்கை விமான சேவையின் சுதந்திர சேவையாளர் சங்கத்திற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

விமான சேவையில் அதிக வருமானமீட்டும் பிரதான பிரிவாக இந்த பிரிவு காணப்படுகின்றது. இதன் மூலம் வருடத்திற்கு 100 அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைக்கப் பெறுகிறது. இந்நிலையில் அரசாங்கம் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளமையின் மூலம் விமான சேவையை வீழ்ச்சியடைச் செய்வதற்கான நடவடிக்கை என்பது தெளிவாகிறது. 

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பின்னர் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருகைதரும் விமானசேவை மந்தமடைந்துள்ளதாக அரசாங்கம் பொய் கூறிக் கொண்டிருக்கிறது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

 

குண்டுத்தாக்குதல்களின் பின்னர் இடைநிறுத்தப்பட்ட அனைத்து விமான சேவைகளும் தற்கோது இயங்குகின்றன. எந்த விமான சேவையும் முடங்கவில்லை என்பதை அரசாங்கத்திடம் தெளிவாகக் கூறிக்கொள்கின்றோம். எமது கருத்தை மீறியும் சேவைக் கட்டணம் குறைக்கப்பட்டால் விமான சேவை மூலம் கிடைக்கப் பெறும் வருமானம் மாதத்திற்கு 175 மில்லியன் வரை குறைவடையும் என்பதையும் உறுதியாகக் கூறுகிறோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08