(எம்.மனோசித்ரா)
இலங்கை விமானசேவையில் சர்வதேச விமானங்களை தரித்து வைத்திருப்பதற்கான கட்டணத்தில் நூற்றுக்கு 25 வீத குறைப்பை மேற்கொள்ள அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தால் மாதத்திற்கு 175 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படும் என்று இலங்கை விமான சேவையின் சுதந்திர சேவையாளர் சங்கம் எச்சரித்துள்ளது.
இலங்கை விமான சேவையின் சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் ஜனக விஜயபத்திரத்ன இது தொடர்பில் தெரிவிக்கையில்,
உள்நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு தரித்து வைத்திருப்பதற்கான கட்டணத்தில் நூற்றுக்கு 25 வீத குறைப்பை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இலங்கை விமான சேவையின் சுதந்திர சேவையாளர் சங்கத்திற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவையில் அதிக வருமானமீட்டும் பிரதான பிரிவாக இந்த பிரிவு காணப்படுகின்றது. இதன் மூலம் வருடத்திற்கு 100 அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைக்கப் பெறுகிறது. இந்நிலையில் அரசாங்கம் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளமையின் மூலம் விமான சேவையை வீழ்ச்சியடைச் செய்வதற்கான நடவடிக்கை என்பது தெளிவாகிறது.
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பின்னர் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருகைதரும் விமானசேவை மந்தமடைந்துள்ளதாக அரசாங்கம் பொய் கூறிக் கொண்டிருக்கிறது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
குண்டுத்தாக்குதல்களின் பின்னர் இடைநிறுத்தப்பட்ட அனைத்து விமான சேவைகளும் தற்கோது இயங்குகின்றன. எந்த விமான சேவையும் முடங்கவில்லை என்பதை அரசாங்கத்திடம் தெளிவாகக் கூறிக்கொள்கின்றோம். எமது கருத்தை மீறியும் சேவைக் கட்டணம் குறைக்கப்பட்டால் விமான சேவை மூலம் கிடைக்கப் பெறும் வருமானம் மாதத்திற்கு 175 மில்லியன் வரை குறைவடையும் என்பதையும் உறுதியாகக் கூறுகிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM