ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்களில் கடன் இல்லாமல்  15, 000 வீடுகளை மக்களிடம் கையளித்துள்ளோம் : சம்பிக பெருமிதம்

Published By: R. Kalaichelvan

02 Aug, 2019 | 02:18 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில் 15 ஆயிரம் வீடுகள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க, இந்த வீடமைப்பு வேலைத்திட்டத்தினால் அரசாங்கம் எந்த விதத்திலும் கடன் சுமைக்குள் தள்ளப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

 

கொழும்பு - கொம்பனித்தெரு பகுதியில் ' மெட்ரோ ஹோம்ஸ் ' வீட்டுத்திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது : 

இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் இது வரையில் கொழும்பிற்கு 9000 மாடி வீடுகளை வழங்கியிருக்கின்றன. ஆனால் நாம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்களில் 15 ஆயிரம் வீடுகளை வழங்கியிருக்கின்றோம். 

எதிர்வரும் ஓரிரு மாதங்களில் இன்னும் 5000 வீடுகளை மக்களிடம் கையளிக்கவுள்ளோம். அது மாத்திரமின்றி எதிர்வரும் மாதங்களில் சுமார் 6000 வீடுகளை நிர்மாணிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளோம். 

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் 2000 வீடுகள் வழங்கப்படவுள்ளன என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17