குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் ‘போக்சோ’ சட்டமூலம் இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை ஒடுக்குவதற்காக, ‘பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும்’ (போக்சோ) சட்டத்தை இந்திய மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த சட்டத்தை கடுமை ஆக்குவதற்காக, இதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. தீவிர பாலியல் தாக்குதல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் திருத்தம் சேர்க்கப்பட்டது. குழந்தைகள் ஆபாசப்படம் தொடர்பான குற்றங்களுக்கு தண்டனை விபரங்களும் சேர்க்கப்பட்டன.
இந்த ‘போக்சோ’ திருத்த மசோதா, பாராளுமன்ற மக்களவையில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசர், “மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவு இருப்பதால், இதை மேலும் ஆய்வு செய்வதற்காக பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
தி.மு.க. உறுப்பினர் கனிமொழி, நிலைக்குழுவுக்கோ அல்லது தேடல் குழுவுக்கோ அனுப்பவேண்டும் என்று வலியுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM