(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
கல்முனை மக்களுக்கு பெரும் சேவையாற்றிய ஏ.ஆர்.மன்சூர், நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பு செய்துள்ளார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான காலஞ்சென்ற சேனராஜா சமரநாயக்க, ஏ.ஆர்.மன்சூர் மற்றும் வீ.கே. இந்திக்க ஆகியோர் மீதான அனுதாப பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
மன்சூர் சட்டத்துறையில் என்னைவிட மூத்தவர். அவர் கல்முனை அமைப்பாளராக இருந்தபோது நான் களனி அமைப்பாளராக செயற்பட்டேன். 1977 தேர்தலில் நாம் பாராளுமன்றம் தெரிவானோம்.எமக்கிடையில் நெருக்கமான தொடர்பு இருந்தது.
கல்முனை அபிவிருத்திக்கு அவர் பெரும் பங்காற்றினார். சிறிய நகரமாக இருந்த கல்முனை பெரிய நகரமாக இன்று அபிவிருத்தி கண்டுள்ளது.
அத்துடன் 1983 இல் இனப்பிரச்சினை எழுந்த போது அது கிழக்கிலும் விஸ்தரித்தது.இருந்தபோதும் எந்த தலையீடும் இன்றி அரச பணிகளை முன்னெடுக்க அவர் நடவடிக்கை எடுத்தார்.ஆர்.பிரேமதாஸ அரசில் அமைச்சராக செயற்பட்ட அவர், நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றினார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM