மன்னார் நகரசபையின் சுத்திகரிப்பு பணியாளர்கள் , சாரதிகள் உட்பட மன்னார் நகரசபையின் கீழ் தொழில்புரியும் ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை (1) காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அடையாள கவயீர்பு போராட்டம் ஒன்றை முன்னேடுத்துள்ளனர்.
மன்னார் நகரசபையின் கீழ் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் 44 ஊழியர்களுக்கு கடந்த 2003ஆம் ஆண்டு மன்னார் ஜீவபுரம் பகுதியில் முன்னால் மன்னார் பிரதேச செயலாளரினால் காணி வழங்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு காணி துண்டுகளுக்கான படமும் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட நிலையில் 15 வருடங்கள் ஆகியும் இது வரை குறித்த துப்பரவு பணியாளர்களுக்கு குறித்த காணிகளுக்கான உறுதிபத்திரமோ அல்லது வீட்டுத்திட்டமோ அடிப்படை வசதிகலோ இதுவரை செய்யப்படவில்லை எனவும் , தாங்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவதாகவும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக உரிய அதிகாரிகளை சந்திக்க முற்படுகின்ற போதும் அவர்களை சந்திக்க முடியாமல் வெளியேற்றப்படுகின்றோம் என தொடர்ந்து தெரிவிக்கின்றனர்.
எவவே தங்களது நிலையை கவனத்தில் கொண்டு தங்களின் நியாயமான கோரிக்கையான 2003 ஆம் ஆண்டு காணிகள் வழங்கப்பட்ட 44 பேருக்கும் காணி உறுதி பத்திரங்களை உடன் வழங்க வேண்டும்,
அளவீடு செய்து ஒதுக்கப்பட்ட காணிகளை பிறருக்கு வழங்குவது உடன் நிறுத்தப்படல் வேண்டும் , காணிக்கு புதிதாக விண்ணப்பித்துள்ள 15 சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கும் காணிகள் உடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், காணி வழங்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வீட்டு திட்டம் மலசலகூடம் மின்சாரம் மற்றும் நீரிணைப்பு கிடைக்க உரிய நடவடிகை எடுக்க வேண்டும் போன்ற அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றிதர நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களும் இன்று வியாழக்கிழமை (1) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் உரிய அதிகாரிகளுக்கும் கையளிக்கப்பட்டது.
குறித்த பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பணிப்புரை விடுத்தார்.
மன்னார் நகர சபையின் தலைவர், செயலாளர், மன்னார் பிரதேசச் செயலாளர் ஆகியோர் இவ்விடையம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதீக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வை உடன் பெற்றுக்கொடுக்குமாறும்,குறித்த பகுதியில் வேறு இடங்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு காணி வழங்குவதை உடனடியாக நிறுத்த பிரதேசச் செயலாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM