(இராஜதுரை ஹஷான்)
ஜனநாயக மக்கள் காங்கிரஸ், ஜனநாயக இடதுசாரி முன்னணிக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் வடக்கினையும், தெற்கினையும் வலுப்படுத்தும்.ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடனான பரந்துப்பட்ட கூட்டணியினை எவ்வழியினாவது நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அதுவே ஐக்கிய தேசிய கட்சிக்கு பாரிய சவாலாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் காங்கிரஸ், ஜனநாயக இடதுசாரி முன்னணிக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளமை தொடர்பிலான தெளிவுப்படுத்தல் ஊடக சந்திப்பு இன்று கொழும்பில் உள்ள கப்ரி ஹோட்டலில் இடம் பெற்றது.
இதன் போது கருத்துரைக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் இரகசியமான முன்னெடுக்கும் திட்டங்கள் பகிரங்கப்படுத்தப்படும் போது அவர்கள் கடந்த அரசாங்கத்தின் மீது பழி சுமத்துவது ஒன்றும் புதிதல்ல, தற்போது பிற நாடுகளின் குப்பைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் யார் என்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
குப்பைகளை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி கடந்த அரசாங்கத்திலே 2013ம் வெளியிடப்பட்டது.ஆகவே அவர்களே பொறுப்பு கூற வேண்டும் என இதன் போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM