இலங்கையில் உணவு பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் போர்மலின் தொடர்பில் தாம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்தக அலுவல்கள் நீண்டகாலம் இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்தல் கூட்டுறவு அபிவிருத்தி தொழிற்பயிற்சி திறனாற்றல் இராஜாங்க அமைச்சர் புத்திஹபத்திரண தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் இதனை இறக்குமதி செய்வதற்கான அதிகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கு முன்னர் அவ்வாறான நிலை இருக்கவில்லையெனவும், இந்த போர்மலின் சடலங்களின் (எம்பாமிற்காக) சடலத்தை நறுமணமூட்டி வைத்திருப்பதற்காக மாத்திரமே பயன்படுத்தப்படும் ஆனால் உணவுப்பொருட்களை நீண்டகாலம் வைத்திருப்பதற்காகவும் தற்பொழுது பயன்படுத்தப்படுவது கவலைக்குரிய விடயடமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் நாட்டில் உள்ள மலர்சாலைகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மலர் சாலைகளின் எண்ணிக்கைக்கு அமைவாக இந்த போர்மலினை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஒழுங்கு விதிகளுக்கு அப்பால் சடலங்களை நறுமணமூட்டி பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் போர்மலின் விநியோகிக்கப்படுமாயின் விநியோகிப்பவர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வணிக பணிகள் தொடர்பில் மூன்று தேசிய கொள்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். பால்மாவுக்கான விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாண் விலைக்கான விலைச் சூத்திரம் விரைவில் அறிமுகப்படுத்துவதற்கும் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM