(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் பிரமோதைய விக்ரமசிங்க ஆகிய இருவரும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிரிக்கெட் சபை தலைவர் திலங்க சுமதிபால எம்.பி கூறிய விடயங்கள் முழுப்பொய் என தெரிவித்த முன்னாள் தலைவரும் தற்போதைய அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க, நான் ஒருபோதும் அவர்களுக்கு எதிராக முறையிடவில்லை என்றும் கூறினார்.
சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை நடத்த முடியாது. அதற்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் விசாரணை பிரிவே விசாரணைகளை நடத்த வேண்டும். இலங்கையில் இந்த பிரிவை உருவாக்க சர்வதேச கிரிக்கெட் சபை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் இந்த மூன்று ஆண்டுகளில் தான் இவ்வாறான நிலைமைகள் உருவாகியுள்ளது. அதுவும் சிம்பாவே இலங்கை போட்டியில் தான் இவ்வாறு போட்டி சூதாட்டம் இடம்பெற்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை திலங்க சுமதிபால பாராளுமன்றத்திற்கு வெளியில் கூறுவாராக இருந்தால் அது குறித்து நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன். பொய்யான காரணிகளை கூற வேண்டாம் எனவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை எழுப்பிய நிலையில் அவர் இந்த காரணியை சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM