(ஆர். யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
அவசரகால சட்டத்தை பயன்படுத்தி பொலிஸார் பெரும்தோட்ட தமிழ் இளைஞர்களுடன் தேவையில்லாமல் உரசிப்பார்த்து வருகின்றனர். அதனால் அவர்களையும் ஆயுதம் தூக்க வைக்கக்கூடாது என இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன் கிழமை அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பெரும்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சிலர் இனவாத ரீதியில் செயற்படுகின்றனர். எல்ல விளையாட்டு மைதானத்தில் எமது இளைஞர்கள் விளையாட எல்ல பொலிஸ் பொறுப்பதிகாரி தடை விதித்துள்ளார். இம்மைதானம் வெள்ளைக்காரர் காலம் முதல் உள்ளது. 5 தலைமுறைகளாக எமது இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது அது தனியாருக்கு சொந்தமானதெனக்கூறி பொலிஸ் பொறுப்பதிகாரி அதில் எமது இளைஞர்கள் விளையாட தடையுத்தரவு பெற்றுள்ளார்.
தோட்டக் கம்பெனி முதலாளிமார்களுடன் சேர்ந்து விருந்துகளில் பங்கேற்கும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளே இவ்வாறான இனவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கி போராடினார்கள். முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் தூக்கி விட்டார்கள். பெரும்தோட்ட இளைஞர்களும் ஆயுதம் தூக்கிப்போராட வேண்டுமென விரும்புகின்றீர்களா? என்று கேட்கின்றேன். எல்ல பொலிஸார் அவசரகால சட்டத்தை பயன்படுத்திக்கொண்டு எமது இளைஞர்களுடன் உரசிப்பார்க்க வேண்டாமென எச்சரிக்கின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM