அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிட்டங்கி நாவிதன்வெளி வாவிக்கு அருகாமையில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள் செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளன.
இன்று புதன்கிழமை(31) கிடைக்கப்பெற்ற விசேட தகவல் ஒன்றினை அடுத்து அப்பகுதிக்கு சென்ற இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பொலித்தீன் ஒன்றில் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட கைக்குண்டுகளை மீட்டனர்.
குறித்த கைக்குண்டுகள் யாவும் ஆற்றங்கரையோரம் பொலித்தீன் பை ஒன்றினுள் இருந்து மீட்கப்பட்டதுடன் இக்குண்டுகளை சிறுவர்கள் கைக்குண்டுகள் என அறியாமல் எடுத்து விளையாடியுள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற கிராமவாசி மற்றும் பொதுமக்கள் இணைந்து சவளக்கடை பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த பொலிசார் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியதுடன் இராணுவத்தினரும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினரும் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM