(ஆர். யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதற்கான இடம்பெற்ற வாக்கெடுப்பில் 40 வாக்குகள் ஆதரவாகவும் 2எதிராவும் அளிக்கப்பட்டன. அதன் மூலம் அவசரகால சட்டம் மீதான பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான விவாதம் இன்று மாலை 6.30 மணிவரை இடம்பெற்ற பின்னர் இறுதியில் சபாநாயகர் கருஜயசூரிய பிரேரணைக்கு எதிர்ப்பு இருக்கின்றதா என வினவியபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் பிரேரணை மீது வாக்கெடுப்பு கோரினார்.
அதன் பிரகாரம் சபாநாயகர் பிரேரணை மீது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறை வாக்கெடுப்பில் அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவாக 42 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்படநிலையில் அவசரகால சட்டம் 40 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
அவசரகால சட்ட நீடிப்புக்கு ஆதரவாக அரசாங்கத்துடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வாக்களித்த அதேவேளை மக்கள் விடுதலை முன்னணி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பில் சார்பில் ஸ்ரீதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய எம்.பி.க்கள் மட்டுமே எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM