மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் 12 கோரிக்கைகளை முன் வைத்து இன்று(31) புதன்கிழமை பகல் மட்டக்களப்பு போதான வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
சுகாதார பணியாளர்களின் பதவி உயர்வை துரிதப்படுத்த வேண்டும், 180 நாட்கள் தொண்டர்களாக வேலை செய்தவர்களை, நிரந்தரமாக்க வெண்டும், சீருடைக்கான கொடுப்பனவை 15 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும், ஒரு வாரத்தில் வேலை நாட்களை ஐந்து நாட்களாக ஆக்க வேண்டும்.
வாரத்துக்கு 40 மணித்தியாலயங்களுக்குமேல் கடமைபுரியும் அனைத்து மணித்தியாலயங்களுக்கும் மேலதிக கொடுப்பனவு வழங்க வேண்டும் போன்ற கோரிக்களை முன்வைத்து சுலோகங்களை ஏந்தியவாறு பகல் 12 மணி தொடக்கம் பிற்பகள் 1மணி வரை இவர்கள் இந்த கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கோரிக்கைகளுக்கு அரசாங்கம் 14 நாட்களில் தீர்வு எட்ப்படாவிட்டால் தொடாந்து போராட்டத்தில் ஈடுபடபோவதாக அவர்கள் nதிரிவித்தனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM