தனக்கு எதிராக செயற்படுவேரை கட்டுப்படுத்த அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தும் அரசாங்கம் - ஜே.வி.பி.

Published By: R. Kalaichelvan

31 Jul, 2019 | 04:11 PM
image

(ஆர். யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

அவசரகால சட்டத்தை பயன்படுத்திக்கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதன் ஓர் அங்கமே உரிமை போராட்டம் மேற்கொண்ட வெளிவாரி பட்டதாரி மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலாகும் என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பயங்கரவாத தாக்குதல் உலகில் அனைத்து பிரதேசங்களிலும் இடம்பெறுகின்றது. ஆனால் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அனைத்து தகவலும் தெரிவித்த பின்னரே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 

அதனால் ஏனைய பயங்கரவாத தாக்குதலுடன் இதனை ஒப்பிடமுடியாது.

அத்துடன் அவசரகால சட்டம் இல்லாத நிலையிலே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் எதிர்காலத்திலும் பாதுகாப்பு தேவைகளுக்காக அவசரகால சட்டம் தேவை என தெரிவிப்பதில் எந்த அடிப்படையும் இல்லை. அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்பவர்களை தடுக்கவும் உரிமை போராட்டங்களை மேற்கொள்பவர்களை கட்டுப்படுத்தவுமே அரசாங்கம் அவசரகால சட்டத்தை பயன்படுத்தி வருகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47