(நா.தனுஜா)
எழுத்தாளர் ஷக்திக சத்குமாரவை நிபந்தனைகள் எதுவுமின்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிற்கு ஒவ்வொருவரும் கடிதமொன்றை அனுப்பிவைக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்திருப்பதுடன், அதற்குரிய மாதிரிக் கடிதத்தையும் வெளியிட்டிருக்கிறது.
விருது வென்ற எழுத்தாளர் ஷக்திக சத்குமார, பௌத்த ஆராமை வாழ்வு மற்றும் அங்கு இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகத்தை மையப்படுத்தி எழுதி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட சிறுகதை ஒன்றைக் காரணம்காட்டி கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அதற்காக தற்போது அவருக்கு 10 வருடகால சிறைத்தண்டனையை எதிர்நோக்கியிக்கிறார். ஷக்திகவின் கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதுடன், அவர் நிபந்தனைகளின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, சக்திகவை விடுதலை செய்யுமாறுகோரி சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM