(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதித் தேர்தலில் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொது வேட்பாளர் இல்லாமல் தேசிய வேட்பாளர் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும்.
அவர் அரச நிதியில் ஊழல் மோசடியில் ஈடுபடாதவராகவும், தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்காதவராகவும், சர்வதேசத்திடமிருந்து நாட்டை பாதுகாப்பவராகவும் இருக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
சுதந்திர கட்சி தலைமை
யகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் தேசிய வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும் என்பதே சுதந்திர கட்சியின் நிலைப்பாடாகும். ஆனால் பொதுஜன பெரமுனவில் சிலர் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அடுத்த பொதுத் தேர்தலில் எவ்வாறேனும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களே இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
டிலான் பெரேரா போன்றோரே இவ்வாறு செயற்படுகிறார்கள். அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினராக இருக்கின்ற போதிலும் பொதுஜன பெரமுன சார்பிலேயே செயற்படுகின்றார். சுதந்திர கட்சி உறுப்பினராக இருக்க விரும்பினால் அவர் எம்முடன் ஒன்றிணைந்து பயணிக்கலாம்.
அல்லது கட்சியிலிருந்து விலகி பொது ஜன பெரமுனவில் இணைந்து கொள்ளலாம். மாறாக கட்சியில் இருந்து கொண்டு அதற்கு எதிராக செயற்பட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷவையும் விரைவில் சந்தித்து கூட்டணி தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
ஆகஸ்ட் 11 ஆம் திகதி பொது ஜன பெரமுனவின் மாநாடு இடம்பெறுவதற்கு முன்னர் இவர்கள் இருவரும் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். அந்த சந்திப்பின் பின்னர் சுந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானமொன்று எடுக்கப்படும்.
திங்கட்கிழமை வேலையில்லா பட்டதாரிகள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இன்று பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள்கூட வீதியில் இறங்கி தொழிலுக்காக போராட வேண்டிய நிலைமையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் அலரி மாளிகைக்கே சென்றிருக்க வேண்டும். எனினும் அந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் ஜே.வி.பி. இருந்ததால் அவர்கள் ரணிலை பாதுகாத்து ஜனாதிபதிக்கு எதிராக திட்டமிட்டுள்ளனர்.
தொழில் வாய்ப்புக்களில் மாத்திரமின்றி மாகாண சபைத் தேர்தல், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திலும் அரசாங்கம் அனைவரையும் ஏமாற்றியுள்ளது. இவ்வளவு காலம் அரசாங்கத்தை பாதுகாத்த கூட்டமைப்பு மூன்று மாத காலத்தில் செய்வதற்கு சாத்தியமற்ற அரசியலமைப்பு பற்றி பேச ஆரம்பித்துள்ளது. இவை அனைத்துமே மக்களை ஏமாற்றும் செயலாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM