(இராஜதுரை ஹஷான்)
பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பெற்ற அரசியல் கட்சிகளை ஒன்றினைக்கும் புதிய கூட்டணி தற்போது வெற்றிப் பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன ஒன்றிணைந்த கூட்டணி என்ற நாமத்தில் செயற்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவித்தல் இம்மாதம் 6ம் திகதி அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த நான்கு வருடகாலமாக பொதுஜன பெரமுனவுடன் ஒன்றினைந்து செயற்படும் அரசியல் கட்சிகள் இதுவரையில் உத்தியோகப்பூர்வமான ஒப்பந்தத்தின் ஊடாக இணையவில்லை.
அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்படுவதாக காணப்பட்டது. தற்போது அனைத்து தரப்பினருடன் ஒன்றினைந்து முறையாக செயற்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM