(எம்.ஆர்.எம்.வஸீம்)
மேல்மாகாண ஆளுநர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அமைதி, சமாதானம் மற்றும் சகவாழ்வுக்கான தேசிய மாநாடு நேற்று கொழும்பு தாமரை தடாக அரங்கில் இடம்பெற்றது.
இலங்கையில் இனங்களுக்கிடையில் சமாதானம் சகவாழ்வு இடம்பெறுவதை உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் நோக்குடன் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த மாடாடு மாலை 5 மணிக்கு ஆரம்பிக்க இருந்ததால் மாலை 4 மணியில் இருந்து பொது மக்கள் வெளிநாட்டு பிரஜைகள் என பலரும் வந்தவண்ணமிருந்தன.
இருந்தபோதும் பிரதம அதிதி,விசேட அதிதி மற்றும் பிரமுகர்களின் வருகையில் ஏற்பட்ட தாமதத்தினால் மாநாடு மாலை 6 மணியளவிலே ஆரம்பிக்கப்பட்டது.
மாநாட்டுக்கு வருகை தந்த பிரதம அதிதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விசேட அதிதியாக வருகை தந்திருந்த உலக முஸ்லிம் சம்மேளனத்தின் செயலாளர் கலாநிதி முஹம்மத் அப்துல் கரீம் அல் ஈஸா, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பொத்த மத விவகார அமைச்சர் காமினிஜய விக்ரம பெரேரா, இந்து மத விவகார அமைச்சர் மனோகணேசன், முஸ்லிம் சமயவிவகார அமைச்சர் அப்துல் ஹலீம் மற்றும் அதிதிகள் சிங்கள கலாசார நடன வாத்தியத்துடன் அரங்குக்கு அழைத்துவரப்பட்டனர்.
ஆரம்பமாக மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று தேசிய கீதத்துடன் மாநாடு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM