மத்திய, ஊவா மாகாணங்களில் குறிப்பாக நுவரலியா, ஹட்டன் பகுதியில் மாத்திரமே வீடமைப்புத்திட்டம் இடம்பெறுவதாக ஒரு சிந்தனைப்போக்கு உண்டு. ஆனால், அது அவ்வாறில்லை. பெருந்தோட்ட மக்கள் எங்கெல்லாம் லயன் காம்பராக்களில் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் நடைமுறைப்படுத்தும் வகையில் இந்திய வீடமைப்புத் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. மலையகத்திலும் வேறு பகுதிகளிலுமாக முன்னெடுக்கப்படும் இலங்கைக்கான இந்திய வீடமைப்புத் திட்டங்கள் இலங்கை–இந்திய நட்புறவு திட்டமாக அமைகிறது என இலங்கைக்கான உயர்ஸ்தானிகரகத்தின் கவுன்சிலரும் வீடமைப்புத்திட்ட பொறுப்பதிகாரியும் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ் தாகனிருமான மஞ்சுநாத் தெரிவித்துள்ளார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 50 வீடுகளைக்கொண்ட வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழா காலி மாவட்டம் தலகஸ்வல தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பியசேன கமகே, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டிருந்தார்.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே மஞ்சுநாத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மத்திய ஊவா மாகாணங்களில் குறிப்பாக நுவரெலியா, அட்டன் பகுதியில் மாத்திரமே இந்திய வீடமைப்புத் திட்டம் இடம்பெறுவதாக ஒரு சிந்தனைப்போக்கு உண்டு. அது அவ்வாறில்லை என்பதை பறைசாற்றும் நிகழ்வே இன்று காலி மாவட்டத்தில் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்கவின் வேண்டுகோளின் பேரில் தல்கஸ்வல தோட்டத்தில் ஆரம்பிக்கப்படும் வீட்டுத்திட்டமாகும்.
இதற்கு முன்னரும் மாத்தறை மாவட்டத்தின் ஹலந்தாவை, தெணியாய தோட்டங்களிலும் தென் மாகாணத்தில் இந்திய வீடமைப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல நுவரலியா, பதுளை, கண்டி, மாத்தளை, மொனராகலை போன்ற மாவட்டங்களில் ஏற்கனெவே பல வீடமைப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில் இந்திய வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்திய வீடமைப்புத்திட்டத்தின் முதல் கட்டமாக 4ஆயிரம் வீடுகளில் 1600 வீடுகள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுவிட்டன. பிரதமர் மோடி மேலதிகமாக வழங்கிய 10ஆயிரம் வீட்டுத்திட்ட பணிகளை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் முதல் கட்டமாக 5000 வீடுகளை அமைப்பதற்கான தோட்டங்கள் சகல பெருந்தோட்ட மாவட்டங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டு பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக காணிகள் அடையாளம் காணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியினால் முன்னெடுக்கப்படும் இந்த வீட்டுத்திட்டத்திற்கு இலங்கை அரசாங்கத்தினால் காணி அமைச்சினால் காணிகள் வழங்கப்படுகின்றன. அதேபோல குடிநீர், மின்சாரம், பாதைகள் முதலான உட்கட்டமைப்பு வசதிகளை அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையிலான மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக வழங்கப்படுகின்றன. இத்தகைய இணைந்த செயற்பாடுகளால் இதனை இலங்கை–இந்திய வீடமைப்பு திட்டம் என்பதே பொருத்தமானது.
இது உண்மையில் இந்திய வீடமை ப்பு திட்டம் என்பதைவிட மக்களாகிய உங்களின் வீடமைப்புத் திட்டம் ஆகும். நீங்கள்தான் இறுதி பயனாளிகள். வீடுகளை அமைப்பதற்கு உங்களுக்கு ஆலோசனை வழங்க செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகள் நியமிக்கப்பட்டி ருக்கின்றார்கள். பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனம் உதவி செய்கிறது. இந்த எல்லா உதவிகளையும் இணைத்து உங்களுக்கான வீட்டை நீங்கள் முறையாக அமைத்துக்கொள்ள வேண்டும். வீடமைப்பு மாத்திரமன்றி வேறு முடியுமான எல்லா வழிமுறைகளிலும் இந்தியா உங்களுக்கு உதவி வழங்க தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM