"தெற்காசியா பொருளாதார ரீதியில் ஒன்றிணைவதால் கிடைக்கும் நன்மைகள்" என்ற தொனிப்பொருளில் அரிசோனா பல்கலைக்கழகத்தின் டொனால்ட் டபிள்யூ. ரெய்னோல்ட்ஸ் ஊடகவியல் பிரிவினால் நடத்தப்பட்ட விவரணக் கட்டுரை போட்டியில் வீரகேசரி நாளிதழில் அதன் செய்தியாசிரியர் ரொபட் அன்டனி எழுதிய கட்டுரை முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
அரிசோனா பல்கலைக்கழகத்தின் டொனா ல்ட் டபிள்யூ. ரெய்னோல்ட்ஸ் ஊடகவியல் பிரிவு அண்மையில் தெற்காசிய நாடுகளின் ஊடகவியலாளர்களுக்கான மாநாடு ஒன்றை டுபாயில் நடத்தியது.
அதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 60 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கையிலிருந்து ஊடகவியலாளர்களை தெரிவு செய்து இந்த மாநாட்டுக்கு அனுப்பியிருந்தது.
இந்த மாநாட்டில் தெற்காசிய பிராந்தியம் பொருளாதார ரீதியில் ஒன்றிணைவதால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மாநாட்டுக்கு பின்னரே குறித்த விவரணக் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.
தெற்காசிய பிராந்தியம் பொருளாதார ரீதியில் கூட்டிணைவது எந்தளவு தூரம் முக்கியம் என்பது தொனிப்பொருளாக இருக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி வீரகேசரி நாளிதழ் சார்பாக குறித்த டுபாய் மாநாட்டில் பங்கேற்ற அதன் செய்தியாசிரியர் ரொபட் அன்டனி "சார்க் பிராந்தியத்தில் வறுமை, வேலையின்மை, பதற்றத்தை தடுக்க பொருளாதார ரீதியில் கூட்டிணைவது அவசியம்" என்ற தலைப்பில் எழுதிய விவரணக் கட்டுரைக்கு முதலாம் இடம் கிடைத்துள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் மற்றும் சிறந்த மாநாட்டு அறிக்கையிடல் குறித்த நிலைகள் ஏனைய சார்க் நாடுகளின் ஊடகவியலாளர்களுக்கு கிடைத்துள்ளன.
அரிசோனா பல்கலைக்கழகத்தின் டொனா ல்ட் டபிள்யூ. ரெய்னோல்ட்ஸ் ஊடகவியல் பிரிவினால் நியமிக்கப்பட்ட நடுவர் குழுவினால் விவரணக் கட்டுரைகள் மதிப்பிடப்பட்டு இந்த தெரிவுகள் இடம்பெற்றுள்ளன.
கட்டுரைப் போட்டி தொடர்பான உத்தியோகபூர்வ முடிவுகள் அரிசோனா பல்கலைக்கழகத்தின் டொனால்ட் டபிள்யூ. ரெய்னோல்ட்ஸ் ஊடகவியல் பிரிவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. https://businessjournalism.org/2019/07/reynolds-announces-winners-of-south-asia-economic-integration-journalism-contest/ என்ற இணையத்தள முகவரியில் போட்டி முடிவுகளை பார்வையிடலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM