இன்றைய திகதியில் நாளாந்தம் 80 கிலோ மீற்றர் தொலைவிற்கு துவிச்சக்கர வண்டியில் பயணித்து, அலுவலகத்திற்கு சென்று, 8 மணி நேரம் பணியாற்றி விட்டு, மீண்டும் இல்லம் திரும்புபவர்கள் அதிகம். இவர்களில் பெரும்பாலானவர்கள் கீழ்ப்பக்க முதுகுவலிக்கு ஆளாகுவார்கள்.
இவர்களில் பலருக்கு மருத்துவ பரிசோதனையில் disc prolapse எனப்படும் தண்டுவடப் பகுதியில் l4, l5 ஆகிய தண்டுவடத்தில் ஏற்படும் நரம்பு அழுத்தம் காரணமாக வலி ஏற்படுகிறது என்பது தெரியவரும். இத்தகைய வலி முதுகில் தொடங்கி கணுக்கால் வரையிலும் நீடித்திருக்கும்.
பலர் வலியால் துடிப்பர். இதன்போது இவர்களின் உடனடி தெரிவு வலிநிவாரணி மாத்திரைகளே. ஆனால் மருத்துவர்கள் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும், பிஸியோதெரபி எனப்படும் உடற்பயிற்சியையும் மேற்கொள்ளவேண்டும் என்று பரிந்துரைப்பர்.
இந்நிலையில் இயன்முறை மருத்துவர்கள் எம்முடைய இல்லத்திற்கு வருகை தந்து, பயிற்சிகளை செய்ய வலியுறுத்துவார்கள். அந்த வகையில் நான்கு மணித்தியாலத்திற்கு ஒரு முறை குப்புற கவிழ்ந்து படுக்க வேண்டும் என்றும், அந்த நிலையில் 15 முதல் 20 நிமிடம் படுத்துறங்க வேண்டும் என்றும் முதல் பயிற்சியாக எடுத்துரைப்பார்கள்.
இதனைத் தொடர்ந்து குப்புற கவிழ்ந்த நிலையில் படுத்துக் கொண்டே, நெஞ்சக பகுதியில் இரண்டு தலையணைகள் வைத்து உறங்க வேண்டும் என்று எடுத்துரைப்பார்கள். இந்தப் பயிற்சி காலையில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைப்பார்கள். இந்த பயிற்சியின் கால அளவும் 15 நிமிடத்தில் 20 நிமிடங்களே. இதனைத் தொடர்ந்து குப்புற கவிழ்ந்து படுத்திருக்கும் நிலையில், உங்களது வலது மற்றும் இடது கைகளை தரையுடன் அல்லது படுக்கையுடன் நன்றாக அழுந்தி இருக்குமாறு வைத்துக்கொண்டு, உங்களது மார்பு பகுதியை மட்டும் எந்த அளவுக்கு தரையிலிருந்து அல்லது படுக்கையிலிருந்து தூக்க இயலுமோ அந்த அளவிற்கு தூக்க வேண்டும்.
மூன்று வினாடிகள் பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விட வேண்டும். இந்த மூன்றும் பயிற்சிகளையும் செய்து வந்தால், உங்களது கணுக்கால் பகுதியில் இருந்த வலி அனைத்தும் தண்டுவடப் பகுதியில் நிலைபெறும். அதாவது வலி ஒரு மையப் பகுதிக்குள் குவிந்துவிடும். அதன் பிறகு வலி குறைந்தது போன்ற உணர்வு ஏற்படும். இதன் பிறகும் கட்டாய ஓய்வும், இயன்முறை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பயிற்சியையும் தொடர்ந்தால், முதுகு வலி குறைய தொடங்கும்.
டொக்டர் செந்தில்குமார்.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM