(ஆர்.விதுஷா)
தகவல் பரிமாற்றங்கள் மற்றும் தொடர்பாடகளில் ஏற்பட்டிருக்கும் நவீன மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் தபால் திணைக்களத்தின் சேவைகளையும் நவீனமயப்படுத்துவதற்கென திட்டங்கள் பலவற்றை முன்னெடுக்கவுள்ளதாக தபால்மாஅதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
தபால் திணைக்களத்தில் முன்னெடுக்கப்படும் நவீன மாற்றங்கள் குறித்து விளக்கமளிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு விளக்கமளித்த அவர் அங்கு கூறியதாவது,
தபால் திணைக்களம் என்பது அரசாங்க திணைக்களங்களில் மிகவும் பழமை வாய்ந்து 326 வருடகால வரலாற்றை கொண்ட திணைக்களமாகும். அண்மைய நவீன மாற்றங்களின் விளைவாக தபால் திணைக்களம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
ஆகவே,இந்த திணைக்களத்தை மூடுவது தொடர்பிலும் ; பேசப்படுகின்றது. இருப்பினும் தபால் திணைக்களத்தினூடாக வழங்ப்படும் சேவைகள் குறித்து மக்களும் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.
ஏனெனில நவீன மாற்றத்திற்கு இணங்க தபால் திணைக்களத்திலும் பாரிய மாற்றங்கள் ஏற்படத்தப்பட்டுள்ளன. இந்த செவைக்காக குறைந்த கட்டணமே அறவிடப்படுகின்றது.
நாட்டில் உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்திலான தபால் பரிமாற்றம் நாளொன்றிற்கு 1.3 மில்லியன் வரையில் இடம் பெறுகின்றது. அந்த வகையில் 653 பிரதான தபால் நிலையங்களும் 3610 உப தபால் நிலையங்களுயும் நாடு பூராகவும் இயங்கி வருகின்றன. அதேபோல் தனியாரால் நடத்தப்படும் உப தபால் நிலையங்கள் 340 வரையில் தமது சேவையினை வழங்கி வருகினறன.
நவீன மாற்றத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் நட்டத்தில் இயங்கம் தபால் திணைக்களத்தை வளர்ச்சி பாதையில் இட்டு செல்லும் வகையில் பல நவீன முறைமைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM