(இராஜதுரை ஹஷான்)
நிதி கொள்கை சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து மத்திய வங்கியினை பலவீனப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அப்பாற்பட்டு திருத்தச்சட்டம் தொடர்பில் பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தினை நாடுவேன் என பாராளுமுன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் புதிய சட்டங்களை உருவாக்கியும், நடைமுறை சட்டங்களில் சீர்த்திருத்தங்களை கொண்டு வந்தும் தேசிய நிதியினை மோசடி செய்துள்ளது .
1953ம் இலக்க மத்திய வங்கியின் பிணைமுறை ஒழுங்குப்படுத்தல் முறைமையில் பாரம்பரியமாக பின்பற்றி வந்த விடயங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமக்கு ஏற்ற விதத்தில் மாற்றியமைத்தார். இதுவே பிணைமுறி மோசடியினை தொடர்ந்து இரு தடவைகள் மேற்கொள்வதற்கு இலகுவான காரணியாக அமைந்தது.
நாட்டுக்குள் பயங்கரவாத செயற்பாடுகளுக்கும், சட்ட விரோதமான செயற்பாடுகளுக்கும் பிற நாடுகளில் இருந்து வரும் நிதியினை கட்டுப்படுத்த முடியாத நிலைமை இந்த திருத்தத்தின் ஊடாக தற்போது ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது. இந்நிலைமை தொடர்ந்து நீடித்தால் நாடு பாரிய விளைவுகளை எதிர்க் கொள்ள நேரிடும் என அவர் இதன் போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM