சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி மாலிக் அசீஸ் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை விசாரணை செய்ய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
வணக்கத்திற்குரிய மாகல்கந்தே சுதன்த தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடே இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் சட்டமா அதிபர் சார்ப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி மாலிக் அசீஸ் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியிருந்தார்.
கடந்த ஏப்பரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி மாலிக் அசீஸ் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு குறித்த முறைப்பாடு நேற்று 29 ஆம் திகதி திங்கட்கிழமை சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் தலைமையகத்திடம் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM