ஜேர்மனியின் பிராங்போர்ட் புகையிரதத்தில் நபர் ஒருவர் தாயையும் மகனையும் தண்டவாளத்திற்குள் தள்ளிவிட்டதில் சிறுவன் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளான்.
புகையிரதத்திற்காக காத்திருப்பவர்கள் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்ட இரண்டு சம்பவம் ஒருவார காலத்திற்குள் இடம்பெற்றிருப்பது ஜேர்மனியில் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நபர் ஒருவர் பெண்ணொருவரையும் அவரது 8 வயது மகனையும் தண்டவாளத்திற்குள் தள்ளிவிட்டதில் 8 வயது சிறுவன் அதிவேக புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளான் என ஜேர்மனியின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் சிறுவனின் தாய் அதிஸ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பியுள்ளார்.
இதேவேளை சந்தேகநபரை பயணிகள் துரத்திச்சென்று பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தாய் கடும் அதிர்ச்சியில் உள்ளார் அவரிற்கு சிகிச்சை வழங்கிவருகின்றோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பயங்கர சம்பவத்தை பயணிகள் நேரில் பார்த்தனர் சந்தேகநபரை துரத்தி சென்று பிடித்தனர் என காவல்துறையினர் தெரிவி;த்துள்ளனர்.
மற்றொரு நபரையும் அவர் தண்டவாளத்திற்குள் தள்ள முயன்றார் ஆனால் அந்த நபர் தன்னை பாதுகாத்துக்கொண்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரித்தியாவை சேர்ந்த நபர் ஒருவரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் இதற்கான காரணம் இன்னமும் தெரியவில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவரிற்கும் குறிப்பிட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும் ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஜேர்மனியில் ஒன்பது நாட்களிற்கு முன்னர் இதேபோன்றதொரு சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.இதில் 34 வயது பெண்மணியொருவர் பலியானார்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து ஜேர்மனியின் புகையிரதநிலையங்களில் காத்திருப்பவர்கள் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் குறித்து எச்சரிகையாகயிருக்கவேண்டும் என எச்சரித்துள்ள அதிகாரிகள் தண்டவாள நுனியிலிருந்து இரண்டு மீற்றர் உள்ளே நிற்குமாறும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை குடியேற்றவாசிகளிற்கும் வெளிநாட்டவர்களிற்கும் அகதிகளிற்கும் ஜேர்மனி அதிகளவில் இடமளித்ததே இந்த சம்பவங்களிற்கு காரணம் என அந்த நாட்டின் வலதுசாரி கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM