(எம்.மனோசித்ரா)
உறுதிமொழிக்கு அமைவாக அரச தொழில் வாய்ப்புகளை வழங்கி பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணுமாறு வலியுறுத்தி வேலையில்லா பட்டதாரிகள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்று தமக்கு நியமனம் வழங்கக் கோரி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
இன்று முற்பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. பின்னர் ஆர்ப்பாட்டக்கார்கள் பேரணியாக ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் சென்றனர். எனினும் அவர்களை ஜனாதிபதி செயலக்கத்திற்குள் செல்ல விடாது பொலிஸார் தடுத்தனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாதுகாப்பு வேலியை தகர்த்துக் கொண்டு செயலகத்திற்குள் செல்ல முற்பட்டனர்.
இதன் போது அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக பொலிஸாரால் கண்ணீர்புகைப் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டன. எனினும் மாலை 3 வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலக வீதியில் அமர்ந்திருந்தனர்.
இதனால் ஓரிரு மணித்தியாலங்கள் லோட்டஸ் சுற்று வட்ட வீதி மற்றும் காலி முகத்திடல் வீதி என்பன மூடப்பட்டிருந்தன. இதனால் கொழும்பின் சில இடங்களில் பாரிய வாகன நெறிசல் ஏற்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM