சிறுபான்மையினருக்கு பெரும் பாதிப்பை தரக் கூடிய புதிய முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்த ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் ஆலோசனை வெளியிட்டார்.
மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் சாத்தியப்பாடுகள் குறித்து முன்னாள் முதலமைச்சரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மாகாண சபைத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இதற்காக உயர்நீதிமன்றம், சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஆகியோர்களிடம் ஜனாதிபதி யோசனைகளை பெற்றுக்கொண்டுள்ளார் எனவும் ஜனாதிபதியின் விருப்பம் புதிய முறைமையில் தேர்தலை நடத்துவது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே இது விடயத்தில் சிறுபான்மைக் கட்சிகள் கவனமாக செயற்படவேண்டும்.
கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தேர்தல் முறையின் மூலமாகக் கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளை சிறுபான்மைக் கட்சிகள் தெளிவுபட அறிந்து, அவற்றின் சாதக பாதகங்களை விளக்கி மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய முறைமையின் (விகிதாசார தேர்தல்) கீழ் நடத்த வேண்டும் எனக் கோரியிருந்தன.
அதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டு வந்த நிலையில் திடீரென புதிய முறையில் தேர்தலை நடத்துவது என எடுக்கும் தீர்மானம் வரவேற்கத்தக்கதல்ல.
ஒருவேளை இவ்வாறு புதிய முறையில் மாகாண சபைத் தேர்தல் நடக்குமானால் 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட புதிய தேர்தல் முறைக்கான பிரேரணைக்கு ஆதரவாக ஆட்சியை காப்பாற்றுகின்றோம் என்ற கோதாவில் கைதூக்கியவர்கள் அனைவரும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் அதன் பெறுபேறுகள் எத்தகைய அவலங்களை சபை நடவடிக்கைகளில் ஏற்படுத்தியுள்ளன என்பதை யாவரும் அறிவர்.
முற்றுமுழுதாக தோல்வியுற்ற ஒரு தேர்தல் முறைமை அது என்பதை அனைத்து அரசியல்கட்சிகளும் அரசியல்வாதிகளும் ஆய்வாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் பிரதமர் இது விடயத்தில் மேற்கொண்ட நழுவல்போக்கும் உதாசீனங்களும் காலதாமதங்களும் திருப்தி தருவனவாக அமையவில்லை.
இந்நிலையில் ஜனாதிபதி மட்டும் புதிய தேர்தல் முறைமையை தூக்கி பிடித்துக் கொண்டிருப்பதன் மர்மமும் புரியவில்லை.
இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்களின் கோரிக்கைகள் அவ்வப்போது உதாசீனம் செய்யப்பட்டுவரும் நிலையில் அவர்களது பிரதிநிதித்துவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நாம் கைகட்டிபார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே இது விடயத்தில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்-.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM