உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆஜராகி சட்சியமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் அன்றைய தினத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரையும் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகி சாட்சியமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக தெரிவுக்குழுவினர் ஜனாதிபதியையும் நாடவுள்ளனர்.
பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வு நாளைமறுதினம் புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இதன்போது பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கபில வைத்தியரத்னவும் சாட்சியமளிக்கவுள்ளார்.
இந்நிலையில், இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக தெரிவுக்குழு மீண்டும் அவரை அழைக்கவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை பாராளுமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால் 10 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து ஆதராங்களையும் பதிவுசெய்ய பாராளுமன்ற தெரிவுக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM