பெரியநீலாவணை பிரதான வீதியில் அதிக நிறையுடன் இறைச்சிக்காக கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகிலிருந்த வடிகானுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று திங்கட்கிழமை(29) காலை 6.15 மணியளவில் ஏறாவூர் பகுதியிலிருந்து இறைச்சிக்காக கோழிகளை ஏற்றிக்கொண்டு கல்முனைப் பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேளை பெரியநீலாவனையில் வைத்து குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால் வீதியருகில் நின்றுகொண்டிருந்த மீன் வியாபாரி ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இந்நிலையில் லொறி சாரதி மற்றும் உதவியாளர் தெய்வாதீனமாக எதுவித காயங்கள் இல்லாமல் மீட்கப்பட்டுள்ளார்கள். இதனால் வடிகான், குறித்த லொறி, வீதியருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கும் சேதமடைந்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக கல்முனை போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM