கர்நாடகாவில் ஆணுறை பற்றாக்குறையாக உள்ளதால் எய்ட்ஸ் நோய் வேகமாக பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. இதனால், பாலியல் தொழிலாளிகள் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கர்நாடகாவில் ஆணுறைகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பாலியல் தொழிலாளிகளுக்கு ஆணுறைகளை இலவசமாக வழங்கும் அரசசாற்பற்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், கர்நாடகா மாநில எய்ட்ஸ் தடுப்பு சமூகத்திலிருந்து போதிய ஆணுறைகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆயினும், அச்சப்பட வேண்டாம் பாலியல் தொழிலாளிகளுக்கு வழங்க விரைவில் போதிய அளவு ஆணுறைகள் கொள்வனவு செய்யப்படும் என்று கர்நாடகா மாநில எய்ட்ஸ் தடுப்பு சமூக திட்ட தலைவர் எஸ்.ஜி. ரவீந்திரா தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பாலியல் தொழிலாளிகளுக்கு மாநில அரசு மாதந்தோறும் 26 முதல் 30 இலட்சம் ஆணுறைகளை இலவசமாக வழங்கி வருகிறது. டிசம்பர் மாதம் பாலியல் தொழிலாளிகளுக்கு வழங்க வெறும் 6.9 இலட்சம் ஆணுறைகளே உள்ளன. இப்படி ஆணுறை பற்றாக்குறை இருப்பதால் எய்ட்ஸ் நோய் பரவும் என்ற அச்சத்தில் பாலியல் தொழிலாளிகள் உள்ளனர். எச்.ஐ.வி. வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று என்பது குறிப் பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM