இந்­திய வம்­சா­வளி மலை­யக சமூ­கத்தின் முதல் பேரா­சி­ரியரான மு.சின்­னத்­தம்பி கால­மானார்

Published By: J.G.Stephan

28 Jul, 2019 | 10:53 AM
image

இந்­திய வம்­சா­வளி மலை­யக சமூ­கத்தின் முதல் பேரா­சி­ரியர் என்ற பெரு­மைக்­கு­ரிய பொரு­ளியல் பேரா­சி­ரியர் மு.சின்­னத்­தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று கொழும்பில் கால­மானார். 

 கண்டி மாவட்டம் ரங்­கல எனும் பிர­தே­சத்தில் முத்­து­சாமி –முத்­து­வ­டிவு தம்­ப­தி­க­ளுக்கு பிறந்த இவர்,  அங்­குள்ள தோட்டப் பாட­சா­லையில் ஆரம்பக் கல்­வி­யைத் ­தொ­டர்ந்தார். இவ­ரது தந்தை தோட்ட வெளிக்­கள உத்­தி­யோ­கத்­த­ராவார். 1948 ஆம் ஆண்டு இவ­ரது குடும்பம் தல­வாக்­கலை கல்­கந்த எனும் பிர­தே­சத்­துக்கு  இடம்­பெ­யர்ந்­தது. பின்னர் தல­வாக்­கலை அரச சிரேஷ்ட பாட­சா­லையில் சாதா­ரண தரம் வரை பயின்றார். பின்னர் 1959 இல் தெல்­லிப்­பளை மக­ஜனா கல்­லூ­ரியில் உயர்­தரம் பயின்று 1961 இல் பேரா­தனை பல்க­லைக்­க­ழ­கத்­துக்கு தெரி­வாகி பொரு­ளி­யலை விசேட பாட­மாக தொடர்ந்தார். 1965 இல் உதவி விரி­வு­ரை­யா­ள­ராகும் சந்­தர்ப்பம் கிடைத்­தது. 

இரண்டு வரு­டங்­களில் நிரந்­தர விரி­வு­ரை­யா­ள­ராகி பின்பு 1969 இல் இங்­கி­லாந்தின் மன்­செஸ்டர் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பொரு­ளியல் முது­மாணி பட்­டத்தைப் பெற்றார். 1974 இல் பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ள­ராகி கட­மை­யாற்றி வந்த இவர்,  1993 ஆம் ஆண்டு  பொரு­ளி­யல்­துறை பேரா­சி­ரி­ய­ரா­கவும் 1997 இல் துறைத்­த­லை­வ­ரா­கவும்  தெரிவு செய்­யப்­பட்டு  2006 இல் ஓய்வு பெற்றார். தோட்ட வீட­மைப்பு உட்­கட்­ட­மைப்பு மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்சின் கீழ் 2006 ஆம் ஆண்டு பத்­தாண்டு திட்ட உரு­வாக்­கத்தில்  தொழில் கல்வி சம்­பந்­த­மான குழு­விற்கு தலைமை தாங்கி பல்­வேறு காத்­தி­ர­மான பங்­க­ளிப்பை செய்தார். தேயி­லையின் செழு­மையும் தொழி­லா­ளர்­களின் ஏழ்­மையும் என்ற ஆய்வு நூலிற்­காக 2015 ஆம் ஆண்டு இவ­ருக்கு சாகித்ய விருது கிடைத்­தது. 

தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் மாதச்­சம்­பளம் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபா­வாக இருக்க வேண்டியதன் அவசியம் ஏன் என்­பதை புள்ளி விப­ரங்­க­ளோடு ஆய்வு செய்து வெளி­யிட்ட இவர், மலை­யக பல்­க­லைக் ­க­ழகம் பற்­றிய செயற்­பா­டு­களில் காத்­தி­ர­மான கருத்­துக்­களை முன்­வைத்­தார்.  அன்­னாரின் பூத­வுடல் அஞ்­ச­லிக்­காக கொழும்பு ஜய­ரத்ன மலர்ச்­சா­லையில் வைக்­கப்­பட்டு, இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 4 மணி­ய­ளவில் பொரளை கனத்தை மயா­னத்தில் நல்­ல­டக்கம் செய்­யப்­படும்.   

– எம். வாம­தேவன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51