டிப்தீரியா எனப்படும் தொண்டை அடைப்பான் நோய் பாதிப்பை தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் தவிர்க்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
டிப்தீரியா எனப்படும் தொண்டை அடைப்பான் நோய், பதினைந்து வயதிற்குட்பட்ட சிறார்களை பெருமளவில் தாக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்பொழுது ஒரு வகையினதான பாக்டீரியா தொற்று மூலம் இந்த பாதிப்பு அவர்களுக்கு ஏற்படுகிறது. இதற்குரிய சிகிச்சைகளும், தடுப்பு மருந்துகளும் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் இதன் காரணமாக உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
தொண்டை வலி, தொடர் இருமல், கழுத்துப் பகுதி வீக்கம், சுவாச அடைப்பு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
இத்தகைய அறிகுறிகள் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இருந்தால், அவர்கள் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று, பரிசோதனை செய்து அவை டிப்தீரியா பாதிப்பு என உறுதிப்படுத்தப்பட்டால், அதற்குரிய சிகிச்சையைப் பெற வேண்டும். இதனை வராமல் தடுப்பதற்கு அதற்குரிய கால கட்டங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறந்தது என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
டொக்டர் குழந்தைசாமி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM