யாழ். பருத்தித்துறை, தம்பசிட்டிப் பகுதியிலுள்ள தோட்டமொன்றின் கிணறிலிருந்து இன்று (27) முற்பகல் கைகள் பின் பக்கமாக கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
பதில் நீதிவான் மற்றும் சட்ட மருத்துவ நிபுணரின் முன்னிலையில் சடலம் இன்று மீட்கப்பட்டது.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த சட்ட மருத்துவ நிபுணர் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு பின்னரே இது கொலையா? தற்கொலையா? எனத் தெரிவிக்க முடியும் என தெரிவித்தார்.
உயிரிழந்த பெண் தம்பசிட்டி, கதிவேற்பிள்ளை வாசிகசாலை வீதி, ஜெகநாத குருக்கள் கிருபாலினி (வயது -35) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதன்போது ´´கைகள் பின் பக்கமாக கயிற்றால் கட்டப்பட்டிருந்ததோடு கால்களும் கட்டப்பட்டிருந்தன. கழுத்தில் ”சோல்” ஒன்று சுற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த பெண், யாழ். பொலிஸ் திணைக்களத்தின் கணக்குக் கிளையில் பிரதான எழுதுவினைஞராகக் கடமையாற்றினார் என்றும் பூசகராக இருந்த அவரது கணவர் தற்போது தற்போது அரச வேலை செய்கின்றார்´´ என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதிவான் சடலத்தை நேரில் சென்று பார்வையிட்டு உடற்கூராய்வுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM