சிரியாவில் குண்டுவெடிப்பில் சிக்கி முற்றாக சேதமடைந்துள்ள கட்டிடத்தின் நுனியிலிருந்து விழும் நிலையிலுள்ள ஐந்து வயது சிறுமியை காப்பாற்றுவதற்கு அவரின் சகோதரிகள் போராடுவதையும் தந்தை அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதையும் காண்பிக்கும் மனதை உலுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது
சிரியாவில் குண்டுவீச்சினால் முற்றாக சேதமடைந்துள்ள கட்டிடத்தின் நுனியில் விழும் நிலையிலுள்ள ஏழு மாத சகோதரியை காப்பாற்ற ஐந்து வயது சகோதரி முயல்வதை குறிப்பிட்ட புகைப்படத்தில் காணமுடிகின்றது.
சிரியாவில் அரச படையினரின் மிகமோசமான தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள இட்லிப்பின் அரிகா நகரில் உள்ளுர் ஊடக செயற்பாட்டாளர் இந்த படத்தை எடுத்துள்ளார்.
விமானதாக்குதலொன்றின் பின்னரே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஐந்து வயது ரெகாம் தனது சகோதரியை காப்பாற்றினார் ஆனால் அவரது தலை கல்லில் அடிபட்டதில் காயமடைந்தார் அம்புலன்சில் கொண்டு செல்லப்படும் வழியில் ரெகாம் மரணமடைந்தா என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரெகாமின் பின்னால் காணப்படும் 3 வயது சகோதரியும் மருத்துவமனையில் இறந்துள்ளார்.
இதேவேளை கட்டிடத்தின் நுனியில் விழும் நிலையில் மீட்கப்பட்ட சிறுமி பாதுகாப்பாக உள்ளார்.
இதேவேளை விமானதாக்குதலில் சிக்கி அவர்களின் தாயாரும் கொல்லப்பட்டுள்ளார்.
சிரிய அரசாங்கம் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள பின்னர் இட்லிப்பில் உயிரிழப்பு பல மடங்காக அதிகரித்துள்ளது.
ஏப்பிரலிற்கு பின்னர் நாற்பது குழந்தைகள் உட்பட 400 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM