பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் குசல் பெரேராவின் சதத்துடன் இலங்கை அணி 314 ஓட்டங்களை குவித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இதில் இன்று கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பாமன முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
திமுத் கருணாரத்ன மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆரம்ப வீரர்களாக களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க 2.5 ஆவது ஓவரில் அவிஷ்க பெர்னாண்டோ 13 பந்துகளை எதிர்கொண்டு 7 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து நடையை கட்டினார் (10-1).
இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய குசல் பெரேரா அணித் தலைவருடன் கைகோர்த்து அதிரடி காட்ட ஆரம்பிக்க இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது.
இதனால் இலங்கை அணி 10 ஓவரில் ஒரு விக்கெட்டினை இழந்து 77 ஓட்டங்களை பெற்றது. அத்துடன் 13.5 ஆவது ஓவரில் 38 பந்துகளை எதிர்கொண்டு குசல் பெரேரா அரைசதம் கடக்க, 15 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் திமுத் கருணாரத்ன 37 (36) ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்(107-2).
மூன்றாவது விக்கெட்டுக்காக குசல் மெண்டீஸ் களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க இலங்கை அணி 20 ஓவரில் 135 ஓட்டத்தை பெற்றது. 27.4 ஆவது ஓவரில் குசல் பெரேரா ஒரு நான்கு ஓட்டத்தை விளாசித் தள்ளி, 82 பந்துகளில் சதம் கடந்தார்.
எனினும் அவர் 32.4 ஆவது ஓவரில் மொத்தமாக 99 பந்துகளை எதிர்கொண்டு 17 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக 111 ஓட்டத்துடன் சவுமி சர்காரின் பந்தில் முஷ்தபிசுர் ரஹ்மானிடம் பிடிகொடுத்து வெளியேறினார் (207-3).
அதையடுத்து இலங்கை அணியின் நான்காவது விக்கெட் 34 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் வீழ்த்தப்பட்டது. அதன்படி குசல் மெண்டீஸ் மொத்தமாக 49 பந்துகளை எதிர்கொண்டு 43 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
5 ஆவது விக்கெட்டுக்காக அஞ்சலோ மெத்தியூஸ் - லஹிரு திரிமான்ன ஆகியோர் ஜோடி சேர்ந்தாடிவர இலங்கை அணி 40 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து 245 ஓட்டங்களை பெற்றது. இந் நிலையில் 44.3 ஆவது ஓவரில் லஹிரு திரிமான்ன 25 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து வந்த திஸர பெரேராவும் 45.2 ஆவது ஓவரில் 2 ஓட்டத்துடன் பெவிலியன் திரும்பினார் (276-6).
தொடர்ந்து களமிறங்கிய தனஞ்சய டிசில்வா களமிங்கி துடுப்பெடுத்தாட இலங்கை அணி 47.5 ஆவது ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களை பெற்றது. இருப்பினும் 48.3 ஆவது ஓவரில் மெத்தியூஸ் 48 (52) ஓட்டத்துடன் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.
இதன் பின்னர் 8 ஆவது விக்கெட்டுக்காக லசித் மலிங்க களமிறங்க அவருக்கு தேசியக் கொடி பிடித்து வரவேற்ப்பு அளிக்கப்பட்டதுடன், அரங்கிலிருந்து அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று மரியாதை அளித்தனர்.
இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 314 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் மலிங்க 6 ஓட்டத்துடனும் நுவான் பிரதீப் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் சைபுல் இஷ்லாம் 3 விக்கெட்டினையும் முஷ்தாபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டினையும், மெய்டி ஹசான், சவுமி சார்கார் மற்றும் ரூபல் ஹூசேன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
photo credit :ICC
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM