தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாணக்கியம், நல்லிணக்கம், இராஜதந்திரம் அனைத்தும் இனப்படுகொலையே என் பதாதைகளை ஏந்தியவாறு காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கபட்டிருந்தது.
இன்று மதியம் 12 மணியளவில் வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து விசேடவழிபாடுகளை மேற்கொண்ட காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள், கந்தசாமி கோவில் வீதி வழியாக மணிக்கூட்டு கோபுரச்சந்தியை அடைந்து அங்கிருந்து கண்டி வீதி வழியாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் இடத்தை சென்றடைந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாணக்கியம், நல்லிணக்கம், இராஜதந்திரம் யாவும் இனப்படுகொலையே என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதையை ஏந்தியிருந்ததுடன், அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் கைகளில் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM