கரவெட்.டி தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட செட்டிததுறை வீதிக்கு சிரேஷ் தமிழ் ஊடகவியலாளரான அமரர் ஐ.நடேசனின் பெயரை சூட்டுமாறு கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு 8 ஆம்மாதம் 26 ஆம் திகதி அரச வர்த்தகமாணி வெளியீட்டில் 8ம் வட்டாரமும் நெல்லியடிக் கிராம அலுவலர் பிரிவு ஜே./376 இல் ஏழாவது வீதியாக செட்டித்துறை வீதி காணப்படுகின்றது.
குறித்த பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அமரர் ஐ.நடேசன் இறைவரித்திணைக்களத்தில் பணியாற்றியதுடன் நாடறிந்த தமிழ் சிரேஷ்ட ஊடகவியலாளராக பணியாற்றினார். அமரர் ஊடகவியலாளராக பணியாற்றிய நிலையில் 2014 ஆம்ஆண்டு 5 ஆம் மாதம் 31 ஆம் திகதி கிழக்கில் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்.
இவரது வரலாறு எமது அடுத்ததலைமுறையினரும் அறிய வேண்டும் என்பதற்காகவும் அவரது சேவைக்கு மதிப்பளிக்கும் முகமாகவும் அவரின் பெயரை 250 மீற்றர் நீளமான மேற்படி வீதிக்கு சூட்டுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM