உலகநாடுகளில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை அதிகரிப்பு அந் நாட்டு மக்களின் அன்றாட நடவடிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் லண்டனிலும் நாளையதினம் வெப்பநிலை 100 பாகை பர்னைட் ஆக அதிகரிக்குமென அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டில் இங்கிலாந்தின் அதிகூடிய வெப்பமானது 102 பாகை பர்னைட் ஆக பதிவாகியுள்ளது.
இதனை முறியடிக்கும் வகையில் அதிகரித்துவரும் லண்டனின் வெப்பநிலை நாளை 100 பாகை பர்னைட்டை (38 C) எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது இங்கிலாந்தில் ஜூலை மாதத்தில் பதிவான 98.1 பாகை பர்னைட் (36.7 C) முறியடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ் வெப்பநிலை அதிகரிப்பு தொடரும் பட்சத்தில் 101.F (38.5C) என்ற இங்கிலாந்தின் வெப்பநிலை சாதனையும் முறியடிக்கப்படலாம் என இங்கிலாந்தின் பொது சுகாதார அமைப்பு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
லண்டனில் நிலவும் வெப்பசூழல் காரணமாக இதுவரை கொட்வோல்ட் நீர்பூங்காவில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மூவர் காணமல்போய்யுள்ளதுடன் கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வெப்பத்தை தணிக்க குழுமியுள்ளனர். அத்துடன் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அரைக்காற்சட்டையுடன் பணிக்கு செல்வதை அவதானிக்கக்கூடியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டின் அதிகூடிய வெப்பநிலையானது 114.8.C ஆக பிரான்ஸில் ஜூன் மாதம் 28 ஆம் திகதி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM