பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த சம்பத்துடன் 50 ரூபா மேலதிக கொடுப்பனவை இணைக்குமாறு வலியுறுத்தி ஹட்டனில் இன்று புதன் கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஹட்டன் நகரில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக பிற்பகல் 3 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள்,பொது மக்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டபலர் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழுத்தத்துக்கு அமைவாக, 50 ரூபா நாளாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் இணங்கியுதுடன், அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்திருந்தது.
ஆனால் குறித்த விடயத்தில் பெருந்தோட்டக் கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தடையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பியவாறு பதாதைகளை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலயம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தினால் சிறிது நேரம் ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM