மார்பக புற்றுநோயினால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய தொழில்கட்சியின் புதிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பெட்டா மேர்பி நாடாளுமன்றத்தில் உருக்கமான உரையொன்றை ஆற்றியுள்ளதுடன் அவுஸ்திரேலியர்கள் தங்களை புற்றுநோய் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மெல்பேர்னின் டங்கிளேயின் உறுப்பினராக தெரிவு பதவிப்பிரமாணம் செய்து இரண்டு வாரங்களிற்குள் அவர் மீண்டும் புற்றுநோய் பாதிப்பிற்குள்ளான அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது.
எனினும் நான் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்கப்போகின்றேன் என தெரிவித்துள்ள அவர் புற்றுநோய்க்கு எதிரான தனது போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை சர்வதேச சுகாதார சேவை நெருக்கடிக்குள்ளாகியுள்ளது என்ற நிபுணர்களின் எச்சரிக்கையை செவிமடுக்குமாறு அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சுகாதார துறையை மறுசீரமைப்பு செய்து அதன் வளர்ச்சிக்காக நிதியை வழங்குங்கள் என அவர் கோரியுள்ளார்.
புற்றுநோய் இரகசியமாக உள்நுழையுமொன்று என்பது எனக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கை மிகவும் பலவீனமானது எந்த நேரத்திலும் நொருங்ககூடியது அதன் காரணமாக அதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பெண்களே உங்களை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுங்கள் ஆண்களே உங்கள் உடல் உங்களிற்கு சொல்லும் செய்தியை புறக்கணிக்கவேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM