(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
துறைமுக நகர திட்டத்தை நிறுத்துவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது அதற்கான இடத்தை மேலும் அதிகரித்து வழங்கியுள்ளது. என்றாலும் நாட்டுக்கு பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுக்கும் மத்திய நிலையமாக மாற்றியமைக்கவே இதனை நாங்கள் அன்று ஆரம்பித்தோம். எமது அரசாங்கம் இருந்திருந்தால் துறைமுக நகரத்திட்ட வேலைகள் முடிந்திருக்கும் என எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிருவாக மாவட்டங்கள் சட்டத்தின் கீழ் மீதான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
துறைமுக நகரத் திட்டத்தை மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் அன்று சீன அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து ஆரம்பித்தபோது, எமக்கு பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டன. சிவப்புச்சட்டைக்காரர்களும் விமர்சித்தனர். இவ்வாறான விமர்சனங்கள் அனைத்தும் அரசியல் குரோதத்தினால் மேற்கொள்ளப்பட்டதாகும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் துறைமுக நகரத்திட்டத்தை நிறுத்துவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அன்று தெரிவித்திருந்தார். ஆனால் இன்று அதனை ஆதரிப்பவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கின்றது. அத்துடன் மேலும் துறைமுக நகரத்திட்டத்துக்கு கூடுதலான இடம் வழங்கப்பட்டிருக்கின்றது. அதனை நாங்கள் எதிர்க்கவில்லை. ஏனெனில் நாட்டின் பொருளாதாரத்துக்கு வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் மத்திய நிலையமாக ஏற்படுத்துவதற்கே எமது அரசாங்கம் இதனை ஆரம்பித்தது.
என்றாலும் சீனாவை விமர்சித்து துறைமுக வேலைத்திட்டத்தை ஒரு மாத காலமாக இடைநிறுத்திய அரசாங்கம், இறுதியில் நஷ்டஈடும் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் நாங்கள் சீனாவுக்கு அந்தக் காணிகளை உரித்துரிமையாக கொடுத்ததாகத் தெரிவித்து இவர்கள் ஒப்பந்தத்தை மாற்றிக்கொண்டு 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளனர். அத்துடன் அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் 99 வருடங்களுக்கு சீனாவுக்கு வழங்கியுள்ளனர். இந்த ஒப்பந்தம் மேலும் 99 வருடங்களுக்கு நீடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
துறைமுக நகரத்திட்டம் அமைக்கப் படுவதால் சிங்கப்பூர் மற்றும் டுபாய் நாடுகளுக்கே சவாலாக இருக்கப் போகின்றது. அந்த நாடுகளில் இருக்கும் முதலீட்டாளர்கள் இங்கு வருவார்கள். ஆசியாவின் பொருளாதார மத்திய நிலையமாகவே துறைமுக நகரத்திட்டம் இருக்கப் போகின்றது. அதேபோன்று ஷங்கிரில்லா ஹோட்டலுக்கு காணியை உரித்துரிமை வழங்கியதாக குற்றம் சாட்டுகின்றனர். ஷங்கிரில்லாவுக்கு அந்தக் காணியை வழங்கிய காலப் பகுதியானது, நாட்டில் யுத்தம் நிறைவடைந்த காலமாகும். நாட்டில் அபிவிருத்தியை மேற்கொள்ள பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இருந்ததால்தான் இதனை அன்று செய்தோம்.
எனவே நாட்டுக்கு நன்மை தரக்கூடிய விடயங்களை அரசியல் குரோதத்துடன் பார்க்காமல் செயற்பட்டால் மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி யெழுப்ப முடியும். இல்லாவிட்டால் அதன் பாதிப்பை எமது சந்ததியினரே அனுபவிக்க வேண்டி வரும். அதனால் எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் இந்தத் துறைமுக நகரத்திட்டம் இந்தளவுக்கு நிறைவடைந்திருக்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM