அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் அமெ ரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நேற்று முன்தினம் திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அவர் அமெரிக்க ஜனாதிபதியுடன் நேரடி சந்திப்பை மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுவரும் மோதல்களால் முறுகல் நிலையை அடைந்துள்ள அமெரிக்க–பாகிஸ்தானிய உறவுகளை சீர்செய்யும் நடவடிக்கையின் அங்கமாக இந்த சந்திப்பு அமைவதாக தெரிவிக்கப்படுகிறது.
டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தான் பொய்களைக் கூறி வஞ்சகத்துடன் செயற்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டி அந்நாட்டுக்கான பாதுகாப்பு நிதியுதவியை கடந்த வருட ஆரம்பத்தில் குறைத்திருந்தார்.
இம்ரான்கானுடனான சந்திப்பின்போது காஷ்மீர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளை மத்தியஸ்தம் செய்வதற்கு ட்ரம்ப் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின் பேரில் மேற்படி இணக்கப்பாட்டைத் தான் தெரிவிப்பதாக அவர் கூறினார். ''இந்த விவகாரத்தில் என்னால் உதவ முடிந்தால் நான் மத்தியஸ்தர் ஒருவராக செயற்படுவதில் விருப்பம் கொண்டுள் ளேன். என்னால் எதையும் செய்ய முடியுமாக இருக்கும் பட்சத்தில் எனக்கு அதை அறியத் தாருங்கள்'' என ட்ரம்ப் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM